பத்ரிநாத் கோவில் நடை நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்


பத்ரிநாத் கோவில் நடை நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்
x

பத்ரிநாத் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் பயணம் நேற்று தொடங்கியது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இதன்படி நேற்று காலை 7 மணிக்கு கேதர்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு கங்கோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலின் நடை 12-ந்தேதி(நாளை) காலை 6 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு பத்ரிநாத் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீ பத்ரிநாத் கேதர்நாத் கோவில் கமிட்டி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story