வங்காளதேசத்தில் இருதரப்பினரிடையே துப்பாக்கி சண்டை; 8 பேர் பலி


வங்காளதேசத்தில் இருதரப்பினரிடையே துப்பாக்கி சண்டை; 8 பேர் பலி
x
தினத்தந்தி 7 April 2023 11:21 PM GMT (Updated: 7 April 2023 11:59 PM GMT)

வங்காளதேசத்தில் இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 8 பேர் பலியாகினர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான பந்தர்பனில் உள்ள கம்டாங் பாரா பகுதியில் சாலையின் ஓரமாக பலர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு 8 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துபோயினர். உடனடியாக போலீசார் அந்த 8 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சண்டையில் முடிந்ததும், இதில் 8 பேர் பலியானதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினா். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் தெரியவராத நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story