7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...!


7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...!
x
தினத்தந்தி 8 Sep 2023 4:03 AM GMT (Updated: 8 Sep 2023 7:10 AM GMT)

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமாகின.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.

இந்தநிலையில், 7 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story