பீகார்: குளிக்க சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு


பீகார்:  குளிக்க சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
x

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

பபுவா,

பீகாரின் பபுவா மாவட்டத்தில் தவபோகர் கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் சிலர் மீன் பிடிப்பதற்காக குளத்திற்கு சென்றுள்ளனர்.

இதில் அவர்கள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் அந்த பகுதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் சுஷீல் குமார் என்பவரின் மகள்களான அனு பிரியா (வயது 12), அன்ஷு பிரியா (வயது 10) மற்றும் மது குமாரி (வயது 8) என தெரிய வந்தது.

அவர்களின் உறவினர்களான அமன் குமார் மற்றும் அபூர்வ குமாரி ஆகியோரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி பபுவா போலீஸ் சூப்பிரெண்டு லலித் மோகன் சர்மா கூறும்போது, அவர்கள் குளத்திற்கு குளிப்பதற்காக மற்றும் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் மூழ்குவது தெரிந்ததும், கிராமத்தினர் அவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர் என டாக்டர்கள் கூறி விட்டனர் என்று அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்தனர் என்று அவர் கூறியுள்ளார்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.


Next Story