பில்கிஸ் பானு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 134 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம்


பில்கிஸ் பானு வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 134 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம்
x

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கில் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்ய கோரி தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

புதுடெல்லி,

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய, மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு 134 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர்.


Next Story