கேரளாவை அதிர வைத்த குண்டு வெடிப்பு: மார்ட்டின் மீது பாய்ந்தது என்.எஸ்.ஏ


கேரளாவை அதிர வைத்த குண்டு வெடிப்பு: மார்ட்டின் மீது பாய்ந்தது என்.எஸ்.ஏ
x

குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் என்ற நபர் போலீசில் சரணடைந்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். அவரிடம் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது உபா சட்டத்தின் கீழ் பிரிவு 16 (1ஏ) மற்றும், இந்திய தண்டனை சட்டம் 302, 307 மற்றும் 3 பிரிவு ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story