மராட்டிய மாநிலத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு


மராட்டிய மாநிலத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
x

மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ராய்காட்டில் இன்று விபத்திற்குள்ளானது. அதிகாலை 4.30 மணியளவில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் லோனவாலா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து நடந்த சமயத்தில் சுமார் 40 பயணிகள் பேருந்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story