6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு


6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
x

காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜார்க்கண்ட், திரிபுரா, கேரளா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 10-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திரிபுராவில் உள்ள போக்சாநகர் மற்றும் தன்பூர் தொகுதிகள், ஜார்க்கண்டில் உள்ள தும்ரி தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி தொகுதி, உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர் தொகுதி மற்றும் கேரளாவில் உள்ள புதுப்பள்ளி தொகுதி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story