சட்டசபை தேர்தல் நடைபெறும் தெலுங்கானாவில் பிராசரம் ஓய்ந்தது


சட்டசபை தேர்தல் நடைபெறும் தெலுங்கானாவில் பிராசரம் ஓய்ந்தது
x

முன்னதாக பிரசாரத்தின் இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்

ஐதராபாத்,

சட்டசபை தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாக, தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆட்சியை பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜனதா தீவிரமாக உழைத்து வருகின்றன. இதனால் மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓயந்தது. முன்னதாக பிரசாரத்தின் இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்.

பிரதமர் மோடி கரிம்நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ஆளும் சந்திரசேகர் ராவ் அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். ஹுசுராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.ஐதராபாத் அருகே போங்கிர் பகுதியில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார். தெலுங்கானா உள்பட நடந்து முடிந்த்ந 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.


Next Story