நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு


நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
x

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில், ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story