நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவி மூச்சுத்திணறி உயிரிழப்பு


நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவி மூச்சுத்திணறி உயிரிழப்பு
x

10-ம் வகுப்பு மாணவி துருபிதா தனது 4-வது வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே உள்ள கோலியக்கோடு பகுதியை சேர்ந்தவர் தாராதாஸ். இவருடைய மனைவி பினு. இவர்களுடைய மகள் துருபிதா (வயது 15). இவர் போத்தன்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே துருபிதா தனது 4-வது வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையில், அந்த பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோவில் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரப்பன்கோடு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துருபிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story