25-வது மாடியில் இருந்து விழுந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு


25-வது மாடியில் இருந்து விழுந்து  கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

25-வது மாடியில் இருந்து விழுந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு கோனனகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் பிரசாந்த் சிங் (வயது 28), கம்ப்யூட்டர் என்ஜினீயர். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் 25-வது மாடியில் இருந்து பிரசாந்த் சிங் கீழே விழுந்தார். இதில், தலை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

பிரசாந்த் சிங் மதுஅருந்தி இருந்ததாகவும், குடிபோதையில் 25-வது மாடியில் இருந்து கால் தவறி விழுந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து கோனனகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story