தெலுங்கானாவில் ரூ.500-க்கு சிலிண்டர் உள்பட 2 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது காங்கிரஸ்


தெலுங்கானாவில் ரூ.500-க்கு சிலிண்டர் உள்பட 2 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது காங்கிரஸ்
x

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற 2 திட்டங்களை ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

ஐதராபாத்,

தெலங்கானா முதல்-மந்தியாக ரேவந்த் ரெட்டி கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 6 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான கோப்புகளில் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.

இதையடுத்து டிசம்பர் 9-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் காப்பீடு வழங்கும் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கான லோகோ மற்றும் போஸ்டரை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற மேலும் 2 திட்டங்களை ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ரூ.500-க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மற்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்களை ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்துள்ளார். மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைத்தனர்.


Next Story