மணிப்பூர் விவகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது: சுஷில் மோடி குற்றச்சாட்டு


மணிப்பூர் விவகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது: சுஷில் மோடி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதாக சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

உதய்பூர்,

மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருந்தபோதும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இடையூறு ஏற்படுத்துவதாக பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டினார்.

மேலும் பாஜக நாடாளுமன்றத்தை நடத்த விரும்புவதாகவும், இந்த விவகாரத்தில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக வெளிப்படையாக கூறியதாகவும், ஆனால் காங்கிரஸ் எந்த விவாதத்தையும் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் இந்த விவகாரத்தில் விவாதத்தை விரும்பவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் அசோக் கெலாட் நிர்வாகத்தின் கீழ் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுஷில் குமார் மோடி கூறினார்.


Next Story