ஹேமந்த் சோரனின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிப்பு


ஹேமந்த் சோரனின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிப்பு
x

Image Courtesy : ANI

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை மார்ச் 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு ராஞ்சி சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், நேற்றைய தினம் காணொலி காட்சி மூலமாக ஹேமந்த் சோரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொது அவரது நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story