மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு


மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
x

பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்கின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், மீண்டும் வரும் 20-ந்தேதி வரை மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்கின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story