கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: மீண்டும் தொடங்கிய கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: மீண்டும் தொடங்கிய கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி
x

கோப்புப்படம்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக, கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்ததால், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட 'கோவோவேக்ஸ்' தடுப்பூசி, 60 லட்சம் கையிருப்பு உள்ளது. ஆனால் தேவைதான் பூஜ்யமாக இருக்கிறது.

'கோவின்' வலைத்தளத்திலும் கோவோவேக்ஸ் இடம்பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.


Next Story