அதானி குழும முறைகேடு: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை தேவை - சீதாராம் யெச்சூரி கோரிக்கை


அதானி குழும முறைகேடு: சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை தேவை - சீதாராம் யெச்சூரி கோரிக்கை
x

கோப்புப்படம்

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கோரிக்கை விடுத்தார்.

கொல்கத்தா,

அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story