சிறப்பு ரெயில் ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரம்: ரெயில் நிலையத்தில் கற்களை வீசிய பயணிகள்.!


சிறப்பு ரெயில் ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரம்: ரெயில் நிலையத்தில் கற்களை வீசிய பயணிகள்.!
x
Muthu Pandian K 14 Nov 2023 6:47 PM GMT (Updated: 15 Nov 2023 1:10 AM GMT)

சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர்.

புதுடெல்லி,

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

அந்த வகையில், பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் இருந்து பீகாரில் உள்ள சஹர்சா வரை சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட இருந்தது. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக சிர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், சிறப்பு ரெயிலானது திடீரென ரத்துசெய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பயணிகள், பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர்.

அதுமட்டுமின்றி, அவர்களில் சிலர் கற்களை எடுத்து போலீசார் மீதும், சிலர் நிறுத்தியிருந்த பயணிகள் ரெயில்கள் மீதும் வீசினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story