சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!


சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!
x
தினத்தந்தி 6 Oct 2023 10:16 AM GMT (Updated: 6 Oct 2023 10:24 AM GMT)

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

கேங்டாக்,

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மிகக்குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது. 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இரு கரைகளையும் உடைத்துக்கொண்டு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. மேலும், மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கிமில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story