சோம்பேறியாக சமைக்காமல் இருந்ததால் ஆத்திரம் - மனைவியை அடித்துக் கொன்ற கணவன்


சோம்பேறியாக சமைக்காமல் இருந்ததால் ஆத்திரம் - மனைவியை அடித்துக் கொன்ற கணவன்
x

உணவு சமைக்காமல் சோம்பேறியாக இருந்ததால் ஆத்திரத்தில் கணவன், மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

வடமேற்கு டெல்லியில் உணவு சமைக்காமல் சோம்பேறியாக இருந்த மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஜ்ரங்கி குப்தா (வயது 28) என்ற நபர் முகுந்த்பூரைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் பிரீத்தி உணவு சமைக்காமல் சோம்பேறியாக இருந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பஜ்ரங்கி, பிரீத்தியை அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பிரீத்தி, புராரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் பால்ஸ்வா டெய்ரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து தலைமறைவான பஜ்ரங்கியை கைது செய்ய கடந்த திங்கள் கிழமை போலீசார் ஒரு குழு நியமித்தனர்.

இந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவியை தாக்க அவர் பயன்படுத்திய கட்டையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story