பாஜகவுடன் கூட்டணி இல்லை: நாடாளுமன்ற தேர்தலில் மஜத தனித்து போட்டி: தேவகவுடா அறிவிப்பு


பாஜகவுடன் கூட்டணி இல்லை:  நாடாளுமன்ற தேர்தலில்  மஜத தனித்து  போட்டி: தேவகவுடா அறிவிப்பு
x

வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹெச்.டி.தேவகவுடா கூறியதாவது: "வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து செயல்பட போவதாக தேவகவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தேவகவுடா அதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story