மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று கோரிக்கை


மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று கோரிக்கை
x

டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்தார். அப்போது அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடித்து தரும்படி கேட்டு கொண்டார்.

மும்பையிலிருந்து மதுரை வரையிலான 'லோக்மான்ய திலக் விரைவு வண்டி' தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான புதிய ரெயில் சேவை, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மூன்று ரெயில்கள் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.


Next Story