வரதட்சணை கொடுமை: பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வரதட்சணை கொடுமை: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் விளையூர் பகுதியை சேர்ந்தவர் ராம்ஷீனா (வயது 31). இவருக்கும், மலப்புரம் மாவட்டம் வாலாஞ்சேரி அருகே பைங்கனூர் பகுதியை சேர்ந்த பைசல் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பைசல் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார்.

இதனால் ராம்ஷீனா தனது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு வந்தார். அதன்படி ரூ.4 லட்சம் கொடுத்து உள்ளனர். அவர் அந்த பணத்தை தனது கணவரிடம் கொடுத்தார். பின்னர் ராம்ஷீனா ஆசிரியர் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் கேட்டு கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் ராம்ஷீனா மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 25-ந் தேதி ராம்ஷீனா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த வாலாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் சாவில் மர்மம் உள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருப்பினும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் ராம்ஷீனாவின் குடும்பத்தினர் போலீசார் விசாரணையை துரிதப்படுத்த வில்லை. விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசிதரனிடம் புகார் அளித்து உள்ளனர்.


Next Story