பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை; 3 பேர் கைது - பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பு என தகவல்


பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை; 3 பேர் கைது - பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பு என தகவல்
x

Image Courtesy : @DGPPunjabPolice twitter

தினத்தந்தி 10 Aug 2023 10:09 PM GMT (Updated: 10 Aug 2023 10:35 PM GMT)

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 பேர் ஹெராயின் போதைப்பொருளை விற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 12 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story