தேர்தலில் ஆள்மாறாட்டம்: போலீசார் - மாணவர்கள் இடையே கைகலப்பு


தேர்தலில் ஆள்மாறாட்டம்: போலீசார் - மாணவர்கள் இடையே கைகலப்பு
x

கேரளாவில் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர், பல்கலைக்கழகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர், பல்கலைக்கழகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

காட்டாக்கடை தனியார் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் எஸ்எஃப்ஐ அமைப்பை சேர்ந்தவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனை வலியுறுத்தி, நடந்த போராட்டத்தின் போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார், தீவிர முயற்சி செய்து மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.


Next Story