டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு


டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
x

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது தனியே அமலாக்கத்துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.

இதனிடையே, சிபிஐ தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி சிசோடியா தொடர்ந்த வழக்கை கடந்த மே மாதம் 30 ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி சிசோடியா டெல்லி ஐக்ரோட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து சிசோடியா மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story