மர்ம உறுப்பில் ஆயுதத்தால் தாக்கி விவசாயி கொலை; மகன் கைது


மர்ம உறுப்பில் ஆயுதத்தால் தாக்கி விவசாயி கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

மர்ம உறுப்பில் ஆயுதத்தால் தாக்கி விவசாயி கொலை செய்த அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சன்னபசவராஜ் (வயது 56). விவசாயி. இந்த நிலையில் சன்னபசவராஜிக்கும், அவரது மகன் ராகேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று சன்னபசவராஜிம், ராகேசும் தோட்டத்தில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தந்தை, மகன் இடையே திடீரென தகராறு உண்டானது.

அப்போது ஆத்திரம் அடைந்த ராகேஷ் அங்கு கிடந்த ஆயுதத்தை எடுத்து சன்னபசவராஜின் மர்ம உறுப்பில் தாக்கியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்து விழுந்து உயிருக்கு போராடிய சன்னபசவராஜை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story