அரியானாவில் செல்போன் இணையசேவை தடை நீட்டிப்பு


அரியானாவில் செல்போன் இணையசேவை தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2024 11:00 PM GMT (Updated: 16 Feb 2024 1:03 AM GMT)

அரியானாவில் செல்போன் இணைய சேவைகளுக்கான தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சண்டிகார்,

விவசாயிகள் போராட்டத்தை கருத்தில்கொண்டு, அரியானாவில் 7 மாவட்டங்களில் செல்போன் இணையசேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றுக்கு 15-ந்தேதிவரை (நேற்று) மாநில அரசு தடை விதித்திருந்தது. போராட்டம் நீடித்து வரும் நிலையில், இந்த தடையை நாளை வரை நீட்டித்து அரியானா மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.


Next Story