கேரளாவில் பரவும் காய்ச்சல்; அடுத்த 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை


கேரளாவில் பரவும் காய்ச்சல்; அடுத்த 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
x

கடந்த 4 நாட்களில் மட்டும் 40 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 309 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் 5 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்த நிலையில், 1,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 4 நாட்களில் மட்டும் 40 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் எலி காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 வாரங்கள் கவனமாக இருக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



Next Story