பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி; திகார் சிறை கைதியான காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் காலமானார்


பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி; திகார் சிறை கைதியான காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் காலமானார்
x

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.


புதுடெல்லி,


காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் அல்டாப் அகமது ஷா என்ற பிரிவினைவாத தலைவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடன், மற்ற 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

இதன்பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவதிப்பட்ட ஷா, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 66. இவர் ஹுரியத் அமைப்பின் தலைவர், மறைந்த சையது அலி ஷா கிலானியின் மருமகன் ஆவார். சிறை கைதியாக ஷா உயிரிழந்த தகவலை அவரது மகள் உறுதி செய்துள்ளார்.


Next Story