டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்: துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு


டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்:  துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 July 2023 9:19 AM GMT (Updated: 5 July 2023 9:28 AM GMT)

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கிடையே எற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது

டெல்லி,

தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீஸ் ஹசரி நீதிமன்றத்தில் இரு வேறு வழக்கறிஞர்கள் குழுவிற்கு இடையே மோதல் எற்பட்டுள்ளது. இதனால் எற்பட்ட தகராறில் ஓருவரை ஓருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்குள்ள காவல்துறை தகவல் தெரிவித்தது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் எற்படவில்லை என தகவல் தெரிவித்து உள்ளது காவல்துறை. தற்போது நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story