சத்தீஷ்காரில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 5 பேர் பலி


சத்தீஷ்காரில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 5 பேர் பலி
x

சத்தீஷ்காரில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுக்கொண்ட விபத்தில் சிக்கி 5 பேர்பலியாகினர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பாலோட் மாவட்டத்தில் உள்ள மார்க்கடோலா என்ற கிராமத்தின் அருகில் சாலையில் நேற்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது அதன் பின்னால் வந்த மற்றொரு கார், லாரியை முந்திச் செல்ல முயன்றது. அதில் லாரி மீது பலமாக மோதியது.

இந்நிலையில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரு சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story