ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்


ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
x

ஆந்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சமீப காலமாக மூத்த தலைவர்களின் தொடர் வெளியேற்றத்தைக் கண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சிக்கலாக, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனி தெலங்கானா மாநில பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா ( ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற ) கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தேல்வி அடைந்தார். அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கர்நாடகாவைத் தாண்டி தென்இந்தியாவில் தங்களது கட்சியை விரிவுபடுத்த நினைக்கும் பாஜகவுக்கு அவர் தலைமை தாங்கக்கூடும் என்று ஆந்திர வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Next Story