நடிகர் கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் படுகாயம் போலீசார் விசாரணை


நடிகர் கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் படுகாயம்  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் நடிகர் கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் நடிகர் கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துணிக்கடை ஊழியர்

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா ஹகலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாலதேஸ். இவர் சிக்கமகளூரு பஸ் நிலையம் அருகே ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் வேலை செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மாலதேஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த மாலதேசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஹாசனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கண்காணிப்பு கேமரா

அங்கு மாலதேஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், மாலதேஸ் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது.

இந்த காட்சியின் அடிப்படையில் அந்த காரின் உரிமையாளர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கார் பெங்களூருவை சேர்ந்த கன்னட காமெடி நடிகர்் சந்திர பிரபா என்பவருடையது என ெதரியவந்தது.

ஆனால் காரை சந்திர பிரபா ஓட்டினாரா? அல்லது டிரைவர் ஓட்டினாரா? என தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் சந்திர பிரபாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story