67 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு


67 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு
x

67 ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

புதுடெல்லி,

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 67 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணையதளங்களை புனே ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் 4 இணையதளங்களை முடக்கவும் உத்தவிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப (வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன்படி, விதி 3(2)(b) மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவுக்கு இணங்கவும், மேலும் குறிப்பிடப்பட்ட அந்த இணையதளங்களில் ஆபாசமான தகவல்கள் வெளியாகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை செப்டம்பர் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட ஐடி விதிகள் 2021ன்படி, ஐடி நிறுவனங்கள் ஹோஸ்ட் செய்த, சேமித்த அல்லது ஆபாசமாக வெளியிடப்பட்டவற்றை அகற்று வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது மார்பிங் செய்யப்பட்டதாக இருந்தாலும் இந்த சட்டத்திற்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story