பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி - நிர்மலா சீதாராமன்


பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி  - நிர்மலா சீதாராமன்
x

கடந்த 10 ஆண்டுகளில்,வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் இடம் பிடித்த முக்கிய அம்சங்கள்:-

# கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

# பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

# லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

# உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.

# வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.

# ரூ.7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும்.

# மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.

# வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.

# வரும் ஜூலை மாதம் எங்கள் அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற லட்சியத்துக்கான வழிமுறைகள் அதில் இருக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story