ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது...!


ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது...!
x

ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைகோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும்.

இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக எல்1 பேண்ட் சிக்னல்களை உள்ளடக்கியது. இதற்கான இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் 28-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Related Tags :
Next Story