இமாசல பிரதேசம்: ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு

இமாசல பிரதேச மாநிலத்தில் ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அமீர்பூர்,
இமாசல பிரதேச மாநிலம் நடவுன் சுற்றுப்பகுதியில் ரங்காஸ், கந்த்ரோலா, ஜோல்-சபத் என பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அங்கு வினியோகிக்கப்படும் குடிநீரை சோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





