இமாசல பிரதேசம்: ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு


இமாசல பிரதேசம்: ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு
x

இமாசல பிரதேச மாநிலத்தில் ஒரே கிராமத்தில் 150 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அமீர்பூர்,

இமாசல பிரதேச மாநிலம் நடவுன் சுற்றுப்பகுதியில் ரங்காஸ், கந்த்ரோலா, ஜோல்-சபத் என பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அங்கு வினியோகிக்கப்படும் குடிநீரை சோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Next Story