இமாச்சல பிரதேசம்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட ஜே.பி. நட்டா, அனுராக் தாக்கூர்..!


இமாச்சல பிரதேசம்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட ஜே.பி. நட்டா, அனுராக் தாக்கூர்..!
x

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

சிம்லா,

இமயமலை பிரதேசங்களான இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன.

இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டியது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளன. அத்துடன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன .

வரலாறு காணாத மழை, வெள்ளம், மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்து வரும் நிலையில், இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் ஜே.பி. நட்டா, கூறியதாவது,

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இங்கு வந்து பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பேரிடர் ஏற்படுத்திய இழப்பை நினைத்து வருத்தப்படுகிறேன். தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என கூறினார்.


Next Story