நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் பெருந்தலைவர் காமராஜர் - பிரதமர் மோடி


நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் பெருந்தலைவர் காமராஜர் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 July 2023 8:03 AM GMT (Updated: 15 July 2023 10:15 AM GMT)

இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் பெருந்தலைவர் காமராஜர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

முன்னாள் முதல்-அமைச்சர் கர்ம வீரர் காமராஜரின் 121வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் காமராஜரின் புகைப்படம், உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக உள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் பொது நலன் குறித்து அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்' என பதிவிட்டுள்ளார்.


Next Story