உதய்பூரில் நடந்ததை வன்மையாக கண்டிக்கிறேன் - மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி


உதய்பூரில் நடந்ததை வன்மையாக கண்டிக்கிறேன் - மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
x

உதய்பூர் டெய்லர் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று கொடூரமான முறையில் கன்னையா லால் வெட்டிக்கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையாலால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து என்.ஐ. ஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

கன்னையாலால் கொலை சம்பவபத்தால் பெரும் மத பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பேனர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "எதுவாக இருந்தாலும் வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை! உதய்பூரில் நடந்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



Next Story