சிக்கமகளூருவில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


சிக்கமகளூருவில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

விநாயகர் சிலை கரைப்பு

சிக்கமகளூரு அருகே குருபரஹள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைத்து அந்தப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில், விநாயகர் சிலையை நேற்று முன்தினம் கரைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்னர் கிராமத்தின் ெவளிப்பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு குளத்தில் இறங்கி விநாயகர் சிலையை கரைத்தனர்.

வாலிபர் சாவு

அந்த சமயத்தில், அந்த கிராமத்தை சேர்ந்த கணேஷ் (வயது 25) என்பவரும் விநாயகரை கரைக்க குளத்துக்குள் இறங்கி உள்ளார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், கணேசை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் கணேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் குளத்தில் மூழ்கி உயிரிழந்த கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story