மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை


மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
x
தினத்தந்தி 25 Sep 2022 7:45 AM GMT (Updated: 25 Sep 2022 7:45 AM GMT)

மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிக்கமகளூரு;

பலாத்காரம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பிலகுலா பகுதியைச் சேர்ந்தவர் சகுனய்யா. இவரது மகன் மது (வயது 22). இதேேபால் அதே பகுதியில் 17 வயது மைனர்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் மதுவுக்கும், மைனர்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி கொண்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி மது, மைனர் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

கைது

இதுகுறித்து மைனர்ெபண், தனது பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மைனர்பெண்ணின் பெற்றோர், உடனே மூடிகெரே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மதுவை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சிக்கமகளூரு கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் வழக்கு குறித்து போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அதில் போக்சோ வழக்கில் கைதான மது மீது குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பாக ரூ.4 லட்சம் நிவாரண தொகையும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


Next Story