"இந்தியா" கூட்டணி பெயர்: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்


இந்தியா கூட்டணி பெயர்: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
x

"இந்தியா" என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு முறை பிரதமராகிய மோடி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்து வருகிறார். இந்தமுறை எப்படியாவது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனால் மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டன. முதற்கட்டமாக பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கர்நாடகாவில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயர் வைக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் கிளம்பியது. டெல்லி ஐகோர்ட்டில் இதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொது நல மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story