உத்தர பிரதேசத்தில் சர்வதேச பலூன் திருவிழா மற்றும் படகு பந்தய போட்டி - 4 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு


உத்தர பிரதேசத்தில் சர்வதேச பலூன் திருவிழா மற்றும் படகு பந்தய போட்டி - 4 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு
x

படகு பந்தயத்தை கங்கை நதியில் 3 கி.மீ. நீளம் உள்ள வழித்தடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வாரனாசியில் வரும் 17-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா மற்றும் படகு பந்தய போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு பந்தயத்தை கங்கை நதியில் தசஸ்வமேத் பகுதியில் இருந்து நமோ காட்ஸ் பகுதி வரை 3 கி.மீ. நீளம் உள்ள வழித்தடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெப்ப காற்று பலூன் திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story