சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து ஐ.டி. ஊழியர்கள் கார் பேரணி நடத்த திட்டம் - போலீசார் தீவிர வாகன சோதனை


சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து ஐ.டி. ஊழியர்கள் கார் பேரணி நடத்த திட்டம் - போலீசார் தீவிர வாகன சோதனை
x

ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ந்தேதி வரை நீட்டித்து விஜயவாடா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் 'சலோ ராஜமுந்திரி' என்ற பெயரில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து ஐதராபாத் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கார் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story