மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம் பெற மாட்டோம் ஐக்கிய ஜனதாதளம் அறிவிப்பு


மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம் பெற மாட்டோம்  ஐக்கிய ஜனதாதளம் அறிவிப்பு
x

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்று உள்ளது.

பாட்னா,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்று உள்ளது. இந்த கட்சியின் முன்னாள் எம்.பி. ஆர்.சி.பி.சிங், மத்திய மந்திரிசபையிலும் இடம் பெற்றிருந்தார்.

இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மத்திய மந்திரி சபையில் யாரும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம்பெறப்போவதில்லை என ஐக்கிய ஜனதாதளம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் நேற்று கூறுகையில், 'மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவதில்லை என்று 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் எடுத்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. மேலும் சமீப நாட்களாக பா.ஜனதாவுக்கும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும் இடையே உரசல்களும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறலாம் என்று வெளியாகியிருக்கும் யூகங்களை ராஜீவ் ரஞ்சன் சிங் மறுத்தார். அனைத்தும் சரியாக உள்ளதாக அவர் கூறினார்.


Next Story