ஜார்க்கண்ட்: ரெயில் தண்டவாளத்தில் 4 பேரின் உடல்கள் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை


ஜார்க்கண்ட்: ரெயில் தண்டவாளத்தில் 4 பேரின் உடல்கள் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Feb 2024 10:50 AM GMT (Updated: 17 Feb 2024 11:19 AM GMT)

ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தென்கிழக்கு ரெயில்வேயின் சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள கெண்டபோசி-தலாபுரு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், கொலையாளிகள் அவர்களை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு உடல்களை தண்டவாளத்தில் வீசிச்சென்றிருக்கலாம் எனவும் ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story