ஜார்க்கண்ட்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது


ஜார்க்கண்ட்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது
x

தனது வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்குபம் பகுதியில் உள்ள பரிஜால் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரையும் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் அந்த பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே அந்த பெண்ணின் வருங்கால கணவர் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கிட்டாகுட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story